• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் வயதானவர்கள் சந்திக்கும் புதிய சவால்களும் தவிர்க்கும் 5 வழிகளும் – முழு விவரம்

Byadmin

Aug 11, 2025


தனிமை, நோய்கள், மன அழுத்தம் - இந்தியாவில் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், மூத்த குடிமக்கள், வயதானவர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டிங்கிள் பாப்பி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனுடன் பொருளாதாரம், உடல்நலம் மற்றும் சமூக பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வயதாகும் போது அதற்கேற்ப தயாராவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொள்வதும் அவசியம்.

2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 மில்லியன் (35 கோடி) வயதான மக்கள் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். வயது சார்ந்து மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுவது, பல கொள்கை ரீதியிலான சவால்களை உருவாக்கும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகள் இவை.

சங்கலா அறக்கட்டளை கடந்த ஆக. 1ம் தேதி ‘ஏஜிங் இன் இந்தியா’ எனும் பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

By admin