• Sat. Mar 1st, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவுக்கு வந்து சிறுநீரகங்களை மியான்மர் மக்கள் விற்பது ஏன்?

Byadmin

Mar 1, 2025


ஸேயா, மியான்மர், சட்ட விரோத சிறுநீரக விற்பனை
படக்குறிப்பு, தான் பெற்ற பணம், கடன்களை திருப்பிச் செலுத்தவும் சிறிது நிலம் வாங்கவுமே சரியாக இருந்தது என ஸேயா கூறுகிறார்

“நான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும், கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் என விரும்பினேன், அதனால்தான் என்னுடைய சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தேன்,” என கூறுகிறார் மியான்மரில் விவசாய தொழிலாளியாக உள்ள ஸேயா.

2021ல் மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போரால் விலைகள் கடுமையாக உயர்ந்தன. தன்னுடைய குடும்பத்துக்கு ஸேயாவால் சரிவர உணவளிக்க முடியவில்லை, மேலும் கடுமையான கடன் நெருக்கடியிலும் சிக்கியிருந்தார்.

அவர்கள் அனைவரும் ஸேயாவின் மாமியார் வீட்டில் வசித்துவருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான யங்கோனில் இருந்து சில மணிநேர பயணத்துக்குப் பின் மண் சாலையில், கூரை வேயப்பட்ட வீடுகள் வரிசைகட்டி நிற்கும் கிராமம் ஒன்றில் அவர்களுடைய வீடு உள்ளது.

தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஸேயாவின் உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது. தங்களுடைய ஒரு சிறுநீரகத்தை விற்ற உள்ளூர் மக்கள் குறித்து ஸேயாவுக்கு தெரிந்திருக்கிறது.

By admin