• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் ரஷ்யா பதிலுக்கு என்ன செய்யக்கூடும்?

Byadmin

Feb 4, 2026


இந்தியா - ரஷ்யா, அமெரிக்கா, எண்ணெய் இறக்குமதி, டிரம்ப், மோதி, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறுகிறார்

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை இந்தியா இதுவரை உறுதி செய்யவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்தது. அந்தப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போர் தொடங்கியதில் இருந்து இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஒரு சாதனை அளவிலான உயர்வைக் கண்டுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டில், ரஷ்யா, இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் டாலரை எட்டியது. ஆனால் இதில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 52.73 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.

இப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார். இந்தியா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 20 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்து விடும்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் புரி கடந்த மாதம் தெரிவித்தார். எரிபொருளை வாங்கும் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. அது தனது எண்ணெய் விநியோக நாடுகளைப் பன்முகப்படுத்தி வருகிறது என்று புரி கூறினார்.

By admin