• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா -ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தத்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை?

Byadmin

Jan 27, 2026


ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அறிவித்துள்ளார்.

இதையொட்டி பேசிய அவர், “இன்று இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இன்று 27-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு” என்றார்.

இந்நிகழ்வின் போது ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் உடனிருந்தனர்.

பிரதமர் மோதி, டா கோஸ்டாவை ‘லிஸ்பனின் காந்தி’ என்று அழைத்து உரையாற்றினார்.

“உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த ஒப்பந்தம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25% மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது,” என்றார் மோதி

By admin