• Tue. Jan 6th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா குறித்து வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் கூறியது என்ன? அவர் ஏன் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது?

Byadmin

Jan 5, 2026


வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷபிகுர் ரஹ்மான்

பட மூலாதாரம், @BJI_Official

வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷபிகுர் ரஹ்மான், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

டிசம்பர் 31 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, இந்திய தூதர் ஒருவரைச் சந்தித்ததாக ஷபிகுர் ரஹ்மான் கூறியிருந்தார்.

ரஹ்மானின் கூற்றுப்படி, பிற நாடுகளின் தூதர்கள் அவரை வெளிப்படையாகச் சந்தித்து நலம் விசாரித்தனர், ஆனால் இந்திய அதிகாரி மட்டும் இந்தச் சந்திப்பை ரகசியமாக வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பேட்டிக்குப் பிறகு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கும் இந்திய தூதருக்கும் இடையே ஒரு ரகசியச் சந்திப்பு நடந்ததாக வங்கதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின.

வங்கதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது, அதில் ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஜமாத் அமைப்பு இந்தியாவுக்கு எதிரான ஒரு குழுவாகவே அடையாளம் காணப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் அவர்களின் அரசியலுக்கு முரணாக அமைந்தன.

By admin