• Fri. May 2nd, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா, பாகிஸ்தானுடன் பேசிய அமெரிக்கா – டிரம்ப் அரசின் நிலைப்பாடு ஏன் கேள்விக்குள்ளாகிறது?

Byadmin

May 2, 2025


இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு - டிரம்ப் அரசின் நிலைப்பாடு குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதன்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருடன் பேசினார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

புதன்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம், ‘இந்த பதற்றங்களைக் குறைக்க இந்தியா பாகிஸ்தானுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடனும் தொலைபேசியில் பேசி, ‘பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும், பாகிஸ்தான் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

தீவிரவாதிகளை ஆதரிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளதுடன், ராஜ்ஜீய உறவுகளைக் குறைப்பது உள்பட பல முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

By admin