• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் சண்டை பற்றி ஐ.நா சபையில் டிரம்ப் பேசியது ஏன்?

Byadmin

Sep 24, 2025


டிரம்ப், புடின், ரஷ்யா - யுக்ரேன் போர், ஐக்கிய நாடுகள் சபை, டிரம்ப் உரை, இந்தியா - பாகிஸ்தான் மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் பற்றி ஐ.நா உரையிலும் குறிப்பிட்டு பேசினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டுமொரு முறை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாகப் பேசியுள்ளார்.

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் மோதல் உட்பட உலகம் முழுவதும் ஏழு போர்களைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு தற்போதுதான் ஐநாவில் உரையாற்றுகிறார். 15 நிமிடங்கள்தான் அவருக்கு ஒதுக்கப்பட்ட போதும் 1 மணி நேரத்துக்கும் மேலாக அவரது உரை நீடித்தது.

டிரம்ப் தனது உரையில் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, சீனா என எந்தத் தரப்பும் டிரம்பின் விமர்சனக் கணையிலிருந்து தப்பவில்லை. லண்டன் மேயர் சாதிக் கான் பற்றி டிரம்ப் தெரிவித்த கருத்தும் சர்ச்சையான நிலையில் பிரிட்டன் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது.

By admin