• Thu. May 8th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா -பாகிஸ்தான் தாக்குதல்: எல்லை மக்கள் கூறுவது என்ன?

Byadmin

May 7, 2025


பாகிஸ்தான், இந்தியா, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா, ராணுவம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஸ்ரீநகரில் வேலிக்குப் பின்னால் இருந்து கண்காணிக்கும் இந்தியத் துணை ராணுவ வீரர்.

புதன்கிழமை அதிகாலை வேளை, பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்குள் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார் முகமது வாஹித். அப்போது அவரது வீட்டை ஒரு பெரும் குண்டுவெடிப்பு அசைத்துப் பார்த்தது.

தான் உடனடியாக படுக்கையில் இருந்து பதறி எழுந்து, தன் குடும்பம் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் வெளியே ஓடியதாக பிபிசியிடம் கூறிய வாஹித், “என்ன நடக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளும் முன்பே, மேலும் பல ஏவுகணைகள் தாக்கத் தொடங்கின. குழப்பமும், பீதியும் எங்கும் பரவத் தொடங்கியது,” என்று கூறினார்.

“குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர். பாதுகாப்பான இடம் தேடிப் பெண்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்” என்று விவரிக்கும் வாஹித், பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் வசிக்கிறார். புதன்கிழமை இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்திய ராணுவம் கூறியது.

By admin