• Sun. Sep 14th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

Sep 14, 2025


ஆசியக் கோப்பை கிரிக்கெட், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷோயிப் அக்தர், ஷோயிப் மாலிக் மற்றும் மிஸ்பா உல் ஹக்

ஆசியக் கோப்பை கிரிக்கெட், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உமர்குல், மிஸ்பா-உல்-ஹக்

ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், சர்வதேச ஊடகங்கள், அரசியல் வட்டாரங்கள் என அனைத்து தரப்பிலும் இந்தப் போட்டி பற்றி விவாதிக்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்கு நாள் நீடித்த ராணுவ மோதலுக்குப் பிறகு இருநாடுகளும் முதல் முறையாக விளையாட இருக்கின்றன.

இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடக் கூடாத என்று வலியுறுத்தின.

அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக எம்பியும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூர், “பன்னாட்டு தொடர்கள் ஏசிசி அல்லது ஐசிசியால் ஒருங்கிணைக்கப்படுகின்றன, எந்த நாட்டிற்கும் அதில் கலந்து கொள்வது தேவையும் கட்டாயமும் ஆகிறது. நாம் கலந்து கொள்ளவில்லையென்றால், தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம். இதனால் மற்ற அணிகளுக்குப் புள்ளிகள் கிடைக்கும்” என்றார்.

By admin