• Tue. Feb 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கேமராவுக்கு பின்னால் நடந்த சந்திப்புகளும் சுவாரஸ்ய தருணங்களும்

Byadmin

Feb 16, 2026


 கிரிக்கெட்டர்கள், இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாஸின் போது இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை, அதேபோல ஆட்டத்தின் முடிவிலும் கிரிக்கெட்டர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை

ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்புவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அன்று மாலை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற அபார வெற்றிக்கு முன்னதாக, ஒரு வானிலை அறிகுறி போட்டி நடைபெறுமா இல்லையா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

மிகவும் பரபரப்பான இந்தப் போட்டிக்கு முன்னதாக நிலவிய குழப்பமான சூழலை அந்த மேகமூட்டம் பிரதிபலித்தது.

வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக ஆரம்பத்தில் எடுத்திருந்த முடிவிலிருந்து பின்னர் பாகிஸ்தான் பின் வாங்கியது. இந்தியாவுக்கு வெளியே தங்கள் நாடு பங்கேற்கும் போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் வங்கதேசம் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் உண்மையான கிரிக்கெட்டைக் காட்டிலும் அதனைச் சுற்றியிருந்த நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வம் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழலால், இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கும் நிகழ்வை பலரும் உற்றுநோக்கினர்.

கேமராக்கள் இல்லாத இடத்தில்..

டாஸ் நேரத்தில் கேப்டன்கள் இடையே வாழ்த்துகள் எதுவும் பரிமாறப்படவில்லை. சூர்யகுமார் யாதவ் மற்றும் சல்மான் அலி அகா ஆகிய இருவருமே பரஸ்பரம் பேசிக் கொள்ளாமல் மௌனம் காத்தனர்.

By admin