• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா, பாகிஸ்தான் மோதல் தீவிரமடைகிறதா? முந்தைய அனுபவங்கள் சொல்வது என்ன?

Byadmin

May 9, 2025


இந்தியா, பாகிஸ்தான் மோதல் தீவிரமடைகிறதா? முன்பு பதற்றம் குறைக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 22ஆம் தேதியன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரிலும் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு கூறியது. அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானும் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தது.

இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், “ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று நேற்றிரவு (மே 8) இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு நடந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று பிபிசியிடம் கூறினார்.

இப்படியாக இரு நாடுகள் இடையிலான பதற்றமும் போர் அபாயமும் அதிகரித்து வருவதாக எல்லையில் உள்ள மக்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். எல்லையோர கிராமங்களில் உள்ள பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

By admin