• Sat. Jun 7th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள மாற்றம் என்ன?

Byadmin

Jun 7, 2025


இந்தியா - பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஃபேல் போர் விமானம் (கோப்புப் படம்)

மே 7-ஆம் தேதி காலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் 9 ‘தீவிரவாத கட்டமைப்புகளை’ தாக்கியதாக இந்தியா அறிவித்து இன்றோடு (ஜூன் 7) ஒரு மாதம் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதன் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக பாகிஸ்தானை இந்தியா நீண்ட காலமாக குற்றம் சுமத்தி வருகிறது. புல்வாமா (2019), மும்பை (2008) போன்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டுகிறது இந்தியா.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும் இத்தகைய குற்றச்சாட்டுகளை, அதாவது, தாக்குதல் நடத்தியவர்களை ஆதரிப்பதாக, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துகிறது இந்தியா.

இந்த தாக்குதல்களில் தங்களுக்கு எந்த விதமான பங்கும் இல்லை என்று கூறி இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

By admin