• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா, பாகிஸ்தான் மோதல் பின்வாங்க முடியாத அளவுக்கு முற்றிவிட்டதா? 4 முக்கிய கேள்விகள்

Byadmin

May 8, 2025


இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் சுமார் ஒன்பது இடங்களில் ஏவுகணை மற்றும் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி (மே 7) நள்ளிரவு 1:05இல் இருந்து 1:30 வரை சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற அந்தத் தாக்குதல், அந்தப் பகுதி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பின் பெரும் சத்தம் அங்கு வசிப்பவர்களை தூக்கத்தில் இருந்து அலறி எழ வைத்தது.

பாகிஸ்தானோ, ஆறு இடங்கள் மட்டுமே தாக்கப்பட்டது எனவும், இந்திய போர் விமானங்கள் ஐந்தையும், ட்ரோன் ஒன்றையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியுள்ளது. இந்தக் கூற்றை இந்தியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான எல்லையாக இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்தியா வான்வெளித் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 46 பேர் காயமடைந்தனர் எனவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

By admin