• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது என்ன நடந்தது? பாகிஸ்தான் அதிபர் சர்தாரி புதிய தகவல்

Byadmin

Dec 30, 2025


பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (கோப்புப் படம்)

மே மாதம் இந்தியாவுடன் ராணுவ மோதல் தொடங்கிய நேரத்தில், தான் நிலத்தடி பதுங்கு குழிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தான் அதை தேர்ந்தெடுக்கவில்லை என்றும், ‘தலைவர்கள் போர்க் களத்தில்தான் இறப்பார்கள், பதுங்குகுழியில் அல்ல’ என்று தனது உதவியாளரிடம் கூறியதாகவும் சர்தாரி குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியின் போது அவர் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 6 மற்றும் 7-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு ”ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையின் போது ஒன்பது இடங்களில் இருந்த ‘பயங்கரவாதிகளின் முகாம்கள்’ மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் தனது பதில் நடவடிக்கையான ‘ஆபரேஷன் புனியன்-உன்-மர்சூஸ்’ மூலம் இந்தியாவின் 26 ராணுவ நிலைகளை குறி வைத்ததாகக் கூறியது.

By admin