• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா மீதான ஐரோப்பிய ஒன்றிய வரி விதிப்பில் மாற்றம் – திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு புதிய நெருக்கடியா?

Byadmin

Jan 27, 2026


ஐரோப்பிய ஒன்றியம், ஜவுளித்துறை, தமிழ்நாடு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பில் செய்துள்ள மாற்றம் திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரியை பொதுவான விருப்பத்தேர்வு (Generalised system of procedures – GSP) முறையில் இருந்து மிகவும் விருப்பமான நாடுகள் (Most Favoured Nation) பிரிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியுள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனால் தோல், உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றாலும் ஜவுளி, ரசாயனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற ஏற்றுமதிகளுக்கு இனி கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால், ஐரோப்பிய சந்தையை பெரிதும் எதிர்நோக்கி இருக்கும் திருப்பூர் ஜவுளித் தொழிலும் கணிசமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அறிவிப்பு என்ன?

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 87% பொருட்கள் தற்போது ஜி.எஸ்.பி. பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

By admin