• Sun. Aug 31st, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா மீதான கூடுதல் வரி – அமெரிக்காவின் ராஜதந்திர தோல்வியாக பார்க்கப்படுவது ஏன்?

Byadmin

Aug 30, 2025


அமெரிக்க வரிகள், டிரம்ப் வரிகள், இந்தியா வரி

பட மூலாதாரம், Tom Brenner for The Washington Post via Getty Images

படக்குறிப்பு, இந்தியா மீதான வரிகளால் அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றானர்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர துறைகளில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

இந்தியா உடனான வர்த்தகப் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்காகவும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாகவும் தனித்தனியாக 25% வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதில் சில பொருட்களிக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியாவின் ஏற்றுமதிகள் 50% வரிகளால் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் மாறுபட்ட எதிர்வினைகளைக் கொடுத்து வருகின்றனர். சிலர் இதனை அடக்குமுறைத்தனமானது என அழைத்துள்ளனர், சிலர் இது உலகளாவிய வணிகத்தில் இந்தியா வேறு சிறந்த வாய்ப்புகளைத் தேட ஊக்குவிக்கும் எனக் கூறுகின்றனர்.

By admin