• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க 30 நாள் ‘விலக்கு’ ஏன்? அமெரிக்காவின் உத்தி பற்றி விளக்கம்

Byadmin

Mar 7, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கப்பல்களில் அதிக அளவு ரஷ்ய எண்ணெய் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் (இடது) கூறினார்.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன. இதற்கிடையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உத்தியை அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் தெளிவுபடுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தி சேனல் ஒன்றில் பேசிய அவர், இரானுடனான அதிகரித்து வரும் மோதலால் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை இது என்று கூறினார்.

இது ரஷ்யா மீதான அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்ல, இது ஒரு குறுகிய கால ஏற்பாடு மற்றும் ‘நடைமுறை அணுகுமுறை’ மட்டுமே என்று ஏபிசி நியூஸிடம் கிறிஸ் ரைட் தெரிவித்தார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க கருவூலத் துறை 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளதாக அதற்கான செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

By admin