• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – வங்கதேசம்: இந்தியாவின் ‘புதிய குடிமக்கள்’ சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு

Byadmin

Feb 24, 2025


வங்கதேசம், இந்தியா,

பட மூலாதாரம், Rubaiyat Biswas

படக்குறிப்பு, பிங்கி ராணி ராய்

  • எழுதியவர், சல்மான் ரவி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

2015ஆம் ஆண்டில், ‘என்க்ளேவ்’ பகுதியில் வசிக்கும் வங்கதேசத்தினருக்கு இந்தியாவில் சிறப்பு குடியுரிமை வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ‘புதிய இந்திய குடிமக்களுக்கு’ தற்போது, இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது கடினமாக இருக்கிறது.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் என்ற பகுதியில் வசிக்கும் இந்த ‘புதிய இந்திய குடிமக்கள்’, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு இரையாகி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்பு அவர்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க முடியாததால், அவர்கள் கூச் பெஹாருக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ‘சந்தேகத்திற்கிடமான’ 31 வழக்குகள் காவல்துறையில் பதிவாகி இருப்பதாகவும், இந்த ‘சந்தேகத்திற்குரிய நபர்களின்’ அடையாள அட்டைகளைச் சரிபார்க்க, காவல்துறை அதிகாரிகள் அவர்கள் கொடுத்த முகவரிகளுக்குச் சென்று விசாரித்து வருவதாகவும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் எம். ஹர்ஷ் வர்தன், காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

By admin