• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – வங்கதேசம் உறவில் ஒரே இரவில் மாறிய சூழல் – டெல்லியில் என்ன நடந்தது?

Byadmin

Dec 20, 2025


இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Riaz Hamidullah/X

படக்குறிப்பு, டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை, வங்கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லா டெல்லியில் விஜய் திவாஸ் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தார்.

இன்குலாப் மஞ்ச் மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. இரண்டு செய்தித்தாள் அலுவலகங்கள் மீது நடந்த தாக்குதல்களில், அவை சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் ஒருபுறமிருக்க, இந்தியத் தூதரகத்தின் வெளியே ஒரு கும்பல் திரண்டு கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுபட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை டாக்காவில் உஸ்மான் ஹாடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக இந்த வாரம் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சமீபத்திய நிகழ்வுகள் வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், சில வங்கதேசத் தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

By admin