• Wed. Dec 24th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா, வங்கதேசம் உறவு மோசமடைய பாகிஸ்தான் காரணமா? என்ன நடக்கிறது?

Byadmin

Dec 24, 2025


மோசமடையும் இந்தியா, வங்கதேசம் உறவு - பாகிஸ்தான் தலையீடு காரணமா? அடுத்து என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன்பாக சனிக்கிழமை இரவு சிலர் போராட்டம் நடத்தினர்.

வேறொரு சூழ்நிலையில், இதுவொரு சிறிய சம்பவமாக இருந்திருக்கும். ஆனால் வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் நிகழ்வுகளும், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம், திங்கட்கிழமை இரவு முதல் அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை சிட்டகாங் மற்றும் ராஜ்ஷாஹியில் உள்ள இந்திய தூதரகங்களிலும் விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக இந்தியா அறிவித்திருந்தது.

வங்கதேசம் என்ன சொன்னது?

இந்தச் சம்பவத்திற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன் நடந்த ஆர்ப்பாட்டம் மிகவும் கவலையளிக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin