• Fri. Dec 26th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா, வங்கதேச உறவு தொடர்ந்து மோசமடைவது ஏன்? அடுத்து என்ன?

Byadmin

Dec 26, 2025


இந்தியா-வங்கதேச உறவுகள், ஷேக் ஹசீனா, தெற்காசியா, அரசியல்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் வெடித்தன.

வங்கதேசத்தில் அண்மையில் நடந்த வன்முறைப் போராட்டங்களின்போது இந்து நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் இந்தியா – வங்கதேச உறவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இரு அண்டை நாடுகளும் உறவைச் சீர்குலைப்பதாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த இருதரப்பு உறவு, சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம், இந்தியாவில் இந்து தேசியவாத அமைப்புகளின் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. கடந்த வாரம், வங்கதேசத்தின் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த 27 வயதான திபு சந்திர தாஸ், ‘மதநிந்தனை செய்ததாக’ குற்றம் சாட்டப்பட்டு, வடக்கு வங்கதேசத்தின் மைமென்சிங் என்ற பகுதியில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

தலைநகர் டாக்காவில் மாணவர் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் வெடிப்பதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்தது.

ஹாதியின் ஆதரவாளர்கள், இந்தக் கொலையில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் அவாமி லீக் கட்சியுடன் (முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி) தொடர்புடையவர் என்றும், அவர் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை மேலும் தூண்டியது.

By admin