• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை மலேசியா மற்றும் பிற நாடுகளைப் போல கண்டிக்காதது ஏன்?

Byadmin

Jan 9, 2026


மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்த தாக்குதல் தொடர்பாக வெனிசுவேலாவுக்குத் தங்கள் ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்ததுடன், அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் அறிக்கை எந்த எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ வெளிப்படுத்தவில்லை.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை, காரகாஸ் நகரில் இருந்து அமெரிக்கா சிறைபிடித்தபோது, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த உலகமே பிளவுபட்டது போலத் தோன்றியது.

ஒருபுறம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் பல நாடுகளும், மறுபுறம் இதை ஆதரிக்கும் தரப்பும் உள்ளன.

ஆனால் இந்தியா இரு தரப்பிலும் இல்லை. அதாவது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வகுத்த அணிசேரா கொள்கையில் இந்தியா உறுதியாக இருந்தது.

இந்தியாவின் அறிக்கை எந்த எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ வெளிப்படுத்தவில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதல் தொடர்பாக வெனிசுவேலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், அமெரிக்காவின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன.

இந்நிலையில், தெற்குலக நாடுகளின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தியா, ஏன் மலேசியா அல்லது தென்னாப்பிரிக்காவை போல வலுவாக எதிர்வினையாற்றவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

By admin