• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா 10 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்த சாபஹார் துறைமுக திட்டத்தில் இருந்து விலகலா?

Byadmin

Feb 2, 2026


 சாபஹார்

பட மூலாதாரம், Indiaportsgloballimited

படக்குறிப்பு,

மத்திய பட்ஜெட்டில், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத் திட்டத்திற்காக இந்தியா எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், சாபஹார் துறைமுகத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2017–18 ஆம் ஆண்டிலிருந்து சாபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. இரானுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இதுவே முதல்முறையாகும்.

சாபஹார் துறைமுகத்திலிருந்து இந்தியா விலகுவதற்கான முக்கிய காரணங்களாக, அமெரிக்காவின் அதிகரித்து வரும் அழுத்தமும், மாறி வரும் புவிசார் அரசியல் சூழலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானின் உலகளாவிய நிலை பலவீனமடைந்துள்ளதும், சாபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யாததற்கான மற்றொரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

By admin