• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

“இந்திய அணியின் தோல்விக்கு காரணம்..” – அக்சர் படேலை சுற்றி நடக்கும் விவாதம் என்ன?

Byadmin

Feb 24, 2026


அக்சர் படேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் அக்சர் பிளேயிங்-11 இல் இல்லை.

ஆமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெறும் மோசமான ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அதன் திட்டமிடலும் உத்தியும் மிகவும் குறுகிய நோக்கம் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 11 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்திய அணி நிர்வாகத்தின் இந்தச் சிந்தனை ஒரு தவறான தேர்வு, முக்கியமான கட்டத்தில் அணியின் தெளிவு மற்றும் விளையாட்டைப் பற்றிய புரிதலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டியது.

தனது சொந்த மைதானத்தில் துணை கேப்டன் அக்சர் படேலை பெஞ்சில் அமர வைக்கும் முடிவு என்பது ஒருமுறை நடந்த தவறு மட்டுமல்ல. இது பெரும்பாலும் மைதானத்தில் வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு பின்னால் மறைந்து விடும் சிக்கலான சிந்தனையின் பிரதிபலிப்பாகும்.

ஒரு குறிப்பிட்ட வகையான போட்டிக்குத் தயாரான அணியால், சூழ்நிலைகள் மாறும்போது அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதும் இதனால் வெளிப்பட்டது. மோதேராவில் இதுதான் நடந்தது, இதைத் தென்னாப்பிரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இறுதியில் இந்தியாவின் தவறான ஷாட் தேர்வுகள் முழுமையான வீழ்ச்சியின் அடையாளமாக மாறியது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா கடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தது. அவர்களின் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றினார். அவர் தேர்வு செய்யப்பட்டபோது தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டதுடன், படேல் எப்படிச் செய்வாரோ அதேபோல சிறப்பாகச் செயல்படவும் செய்தார்.

By admin