• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய அணி ‘கோப்பையை பெற்றுக் கொள்ள வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்தது யாரால்?

Byadmin

Sep 29, 2025


ஆசிய கோப்பை, இந்தியா - பாகிஸ்தான், கிரிக்கெட், சூர்யகுமார் யாதன், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டிக்குப் பிறகு வெற்றியை கொண்டாடிய சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

ஆனால் இந்திய அணியின் வெற்றியை விடவும் அதற்குப் பிறகு நடந்தவை தான் விவாதப் பொருளாகியுள்ளன.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொஷின் நக்வியிடம் கோப்பையை பெற இந்திய அணி மறுத்துவிட்டது.

இறுதிப்போட்டியில் 147 ரன் என்கிற இலக்கை கடைசி ஓவரில் எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

By admin