• Thu. Sep 11th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல் | Sri Lanka approves development of Pedro Port in Jaffna with assistance from the Indian govt

Byadmin

Sep 11, 2025


ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல் மைல் தொலை​வில் உள்​ளது.

இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக, அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் பருத்​தித்​துறை துறை​முகம் சேதமடைந்​தது. 1995-ல் விடு​தலைப் புலிகளிடம் இருந்து இந்த துறை​முகம் இலங்கை ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​டது.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி​யின்​போதும் இந்த துறை​முகம் கடும் சேதமடைந்​தது. 7 ஹெக்​டேர் பரப்​பளவு கொண்ட இந்த துறை​முகத்​தில் 300 படகுகள் வரை​ நிறுத்த முடி​யும், இந்நிலையில் இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தி, மீன் பதனிடும் அறை, விற்​பனை நிலை​யம் மற்​றும் எரிபொருள் நிரப்பு நிலை​யம் ஆகிய​வை​ அமைக்​கப்பட உள்​ளன.

பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம்.

இலங்​கை​யின் வட மாகாணப் பகு​தி​யில் கடல் அட்டை பண்ணை வளர்ப்​பில் கவனம் செலுத்தி வரும் சீன அரசு, இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில் உள்ள இந்த துறை​முகத்தை மேம்​படுத்த தீவிரம் காட்​டியது.

ஆனால், இலங்கை அமைச்​சரவை பருத்​தித்​துறை துறை​முகத்தை மேம்​படுத்த இந்​திய அரசுக்கே ஒப்​புதல் அளித்தது. இந்​நிலை​யில், பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகத்​தின் மேம்​பாட்டு திட்​டத்​துக்​காக, இந்​தி​யா​வின் மீன்​பிடித் துறை அமைச்​சகத்​தின்​கீழ் இயங்​கும் மீன் வளத்​துக்​கான மத்​திய கடலோரப் பொறி​யியல் நிறு​வனத்​தினர் யாழ்ப்​பாணம் சென்​றுள்​ளனர்.

இந்​தக் குழு​வினர் யாழ்ப்​பாணத்​தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளி​கை​யில், ஆளுநர் வேத​நாயகன் தலை​மை​யில் நடை​பெற்ற, பருத்தித்​துறை மீன்​பிடி துறை​முகத்​தின் மேம்​பாட்டு பணி​களுக்​கான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்​திய துணைத் தூதர் சாய் முரளி​யும் இதில் பங்​கேற்​றார். முன்னதாக, இந்திய தூதுக் குழு​வினரை வரவேற்ற ஆளுநர் வேத​நாயகன், இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரி​வித்​துக் கொண்​டார்.



By admin