• Fri. Mar 27th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏஐ வரவால் சிக்கலா? ஒரு முழுமையாக பகுப்பாய்வு

Byadmin

Mar 27, 2026


இந்திய ஐடி நிறுவனங்கள், ஏஐ வரவு, வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளில், இந்திய ஐடி நிறுவனங்கள் லட்சக்கணக்கான பட்டதாரிகளைப் பணியில் இணைத்துள்ளன

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சமீப காலமாக மிகக் கடுமையாகச் சரிந்துள்ளன.

இந்தியாவின் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பேக் ஆஃபிஸ் துறைக்கு ஆதரவளிக்கும் பாரம்பரிய அவுட்சோர்சிங் மாதிரியை, செயற்கை நுண்ணறிவு சீர்குலைத்துவிடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுவதே இதற்குக் காரணம்.

இந்தப் பங்கு விலை சரிவு, பாரம்பரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்டுள்ள உலகளாவிய திருத்தத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், தகவல் தொழில்நுட்பத் துறை பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

கடந்த 35 ஆண்டுகளாக, இந்தியாவின் மென்பொருள் துறை லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உயர் லட்சியமும் வலுவான நுகர்வுத் திறனும் கொண்ட ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கவும் இது உதவியது. அதன் விளைவாக, கடந்த 30 ஆண்டுகளில் பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம் போன்ற முக்கிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள், உணவகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய 10 மென்பொருள் நிறுவனங்களைக் கண்காணிக்கும் நிஃப்டி தகவல் தொழில்நுட்பக் குறியீடு, இந்த ஆண்டு சுமார் 20% சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான செல்வத்தை இழந்துள்ளனர்.

By admin