• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு பாகிஸ்தானில் என்ன நேர்ந்தது?

Byadmin

Feb 21, 2026


பச்சா கான் பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிலால் அகமது
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

“பல்கலைக்கழகத்திலிருந்து நான் நீக்கப்பட்ட விஷயம் எனது தந்தைக்கு தெரியாது. இது எனது தாய்க்கு மட்டுமே தெரியும்.”

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லோயர் டிர் மாவட்டத்தைச் சேர்ந்த முராத் கான், ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று பச்சா கான் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். அவர் உட்பட நான்கு மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியது.

வைரலான காணொளியில், ஒரு மாணவர் இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதையும், அவருடன் பல மாணவர்கள் இணைவதையும் காண முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பச்சா கான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்தை அறிய பிபிசி பலமுறை தொடர்பு கொள்ள முயன்றது. இருப்பினும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

வீடியோவில் என்ன இருக்கிறது?

இந்த வீடியோ பிப்ரவரி 11 அன்று மாலை பச்சா கான் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டது. அப்போது வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்திருந்தன.

By admin