• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? CDS ஜெனரல் அனில் செளகான் பதில்

Byadmin

May 31, 2025


இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்

இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார்.

சிங்கப்பூரில் இன்று (2025 மே 31 சனிக்கிழமை) ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்பதை தெரிந்துக் கொள்வதை விட, சேதம் ஏன் ஏற்பட்டது என்பதை அறிவதே மிக முக்கியமானது’ என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஆறு இந்திய விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தானின் கூறியதை அவர் மறுத்தார்.

“ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்,” என்று பதிலளித்த அவர், சேதமடைந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் தான் ப்ளூம்பெர்க்கிற்கு அவர் நேர்காணலை வழங்கியுள்ளார்.

By admin