• Thu. Sep 25th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய விடுதலை இயக்கத்தை விட சுயமரியாதை இயக்கம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததா?

Byadmin

Sep 25, 2025


சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டு பெண்களின் நிலையை எப்படி மாற்றியுள்ளது?

(சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் இரண்டாம் கட்டுரை.)

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியதிலிருந்தே பெண்கள் அந்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். அதேபோல அந்த இயக்கத்தின் செயல்திட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு இருந்தது. பெண்களின் 2,000 ஆண்டுகால ஆற்றாமைக்கு சுயமரியாதை இயக்கம் ஒரு குரலைத் தந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியதிலிருந்து சமூக சீர்திருத்தத்திற்காக ஒவ்வொரு கூட்டத்திலும் சில முக்கியக் கருத்துகளை வலியுறுத்தி வந்தார். அவற்றில் பெண்களின் மேம்பாடு குறித்த சில கருத்துகள் அந்த காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.

வரலாற்றாசிரியரான சுனில் கில்னானி Periyar: Sniper of Sacred Cows என்ற தனது கட்டுரையில், பெரியாரின் பெண்களின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் குறித்துப் பேசும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

By admin