• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

இந்திரா காந்தி காலத்தில் கையெழுத்தான இந்தியா – வங்கதேசம் 25 ஆண்டு நட்பு ஒப்பந்தத்தால் என்ன சர்ச்சை?

Byadmin

Mar 25, 2025


ஷேக் முஜிபுர் ரஹ்மான், இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திரா காந்தியும் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் 1972 இல் நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

  • எழுதியவர், தாரேகுஜமான் ஷிமுல்
  • பதவி, பிபிசி நியூஸ் பாங்களா, டாக்கா

வங்கதேசம் சுதந்திரம் அடைந்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் இந்திரா காந்தி டாக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் அதுவாகும்.

வங்கதேசத்தில் இந்திரா காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்துக்கு வந்திருந்தார். இந்தப் பயணத்தை ஒட்டி ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது இந்திரா காந்தி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1972 மே 19 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் ‘இந்தியா-வங்கதேச மைத்ரி (நட்பு) ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்டது. 25 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போது அரசியல் வட்டாரங்களில் பல விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.

வங்கதேசத்தின் அன்றைய எதிர்கட்சிகள் இதை ‘அடிமை ஒப்பந்தம்’ என்று தொடர்ந்து அழைத்தன.

By admin