• Thu. May 29th, 2025

24×7 Live News

Apdin News

இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம்: பெண்கள் சுகாதாரத்தை கவனத்தில் கொள்வது அவசியம் | World Menstrual Hygiene Day

Byadmin

May 28, 2025


சென்னை: உலக மாத​வி​டாய் சுகா​தார தினம் ஆண்​டு​தோறும் மே 28-ம் தேதி (இன்​று) கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. மாத​வி​டாய் குறித்து வெளிப்​படை​யாகப் பேசுவ​தில் உள்ள தயக்​கத்​தைப் போக்​கு​வதற்​கும், தவறானப் புரிதல்​களைக்களை​ய​வும், விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் ஜெர்​மனி​யில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறு​வனத்​தால் 2013-ல் மாத​வி​டாய் தினம் தொடங்​கப்​பட்​டு, 2014 முதல் இந்த தினம் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த ஆண்​டின் மாத​வி​டாய் சுகா​தார தினத்​தின் கருப்​பொருள் ‘மாத​வி​டாய் விழிப்​புணர்​வுமிக்க உலகம்’ என்​ப​தாகும். மாத​வி​டாய் சுகா​தார தினம் மருத்​து​வர்​கள் கூறிய​தாவது: பெண்​களுக்கு மாத​வி​டாய் என்​பது 28 முதல் 35 நாட்​களுக்​குள் சுழற்சி முறை​யில் நடைபெறக்​கூடியது. மாத​வி​டாய் 3 நாட்​கள் முதல் 5 நாட்​கள் இருக்​கும். மாத​வி​டாய் காலத்​தில் பெண்​களுக்கு சுகா​தா​ரம் முக்​கி​யம் என்​ப​தால் இந்த தினம் கடைப்​பிடிக்​கப்​படு​கிறது.

அந்​தக்​காலத்​தில் மாத​வி​டாய் காலத்​தில் வீட்​டில் உள்ள பழைய துணி​களை கிழித்​துப் பயன்​படுத்தி வந்​தனர். தற்​போது ஏற்​பட்​டுள்ள விழிப்​புணர்​வால் சானிட்​டரி நாப்​கின்​,​டாம்​பூன், மென்​ஸ்ட்​ரு​வல் கப் போன்​றவற்​றைப் பயன்​படுத்​துகின்​றனர். பள்​ளி​களி​லும் மாணவி​களுக்கு சானிட்​டரி நாப்​கின் வழங்​கப்​படு​கிறது.

துணி​களைப் பயன்​படுத்​து​வது சுகா​தா​ரமற்ற முறை​யாகும். இதனால், தொற்​றுப் பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதனால், மாத​வி​டாய் காலத்​தில் யாரும் துணி​களைப் பயன்​படுத்த வேண்​டாம். மாத​வி​டாய் காலத்​தில் சுகா​தா​ரம் முக்​கி​யம் என்​பதை ஒவ்​வொரு பெண்​ணும் கவனத்​தில் கொள்​ளவேண்​டும்.

மாத​வி​டாய் காலங்​களில் வயிற்று வலி, கை, கால்​களில் வலி​போன்ற உடல் உபாதைகள் இருக்​கும். அதற்​காக பயப்பட வேண்​டாம். மாத​வி​டாய் காலம் முடிந்​தவுடன் சரி​யாகி விடும். அதி​க​மான வலி இருந்​தால் மருத்​து​வரை அணுகலாம். வழக்​க​மாக சாப்​பிடும் உணவு​களை சாப்​பிடலாம். அதில் எவ்​விதக் கட்​டுப்​பாடும் இல்​லை. சிறிய அளவி​லான உடற்​ப​யிற்சி மேற்​கொள்​ளலாம். யோகா செய்​ய​லாம். வழக்​க​மாக மேற்​கொள்​ளும் செயல்​பாடு​களை மாற்ற வேண்​டிய​தில்​லை.

அந்​தக்​காலத்​தில் மாத​வி​டாய் காலத்​தில் வலி இருப்​ப​தா​லும், சோர்​வாகக் காணப்​படு​வார்​கள் என்​ப​தா​லும், எந்த வேலை​யை​யும் செய்ய வி​டா​மல்​ தனிமைப்​படுத்​திகொள்​ளச்​ சொன்​னார்​கள்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்.



By admin