• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

இமயமலையில் தொடரும் இயற்கைப் பேரழிவுகள்- பருவமழை காலம் ஆபத்தானதாக மாறியுள்ளது ஏன்?

Byadmin

Oct 19, 2025


இமயமலை, பருவமழை, இந்தியா, இயற்கை, வானிலை

அக்டோபர் 7 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டம் வழியாக ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 15 பயணிகள் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம், இந்த ஆண்டின் பருவமழைக் காலத்தில் மாநிலத்தில் நடந்த தொடர் விபத்துகளில் கடைசியாக நடந்தது. இந்தச் சங்கிலி முடிவடைவதாகத் தெரியவில்லை.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தீவிர வானிலை நிகழ்வுகளால் 141 பேர் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று பலர் அஞ்சுகின்றனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்த ஆண்டுப் பருவமழைக் காலம் இந்தியா முழுவதும் துயரமானதாக மாறியுள்ளது.



By admin