• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரானின் தாக்குதல் குறித்து துபை, கத்தார், பஹ்ரைனில் வாழும் தமிழர்கள் கூறுவது என்ன?

Byadmin

Mar 2, 2026


துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகை

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் பிரபலமான நகரமான துபை, சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு பெயர் போனது. ஆனால், இதுவரை தனது நவீன வரலாற்றில் காணாத காட்சிகளை அந்நகரம் கடந்த 24 மணிநேரத்தில் கண்டுள்ளது.

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று துபை சர்வதேச விமான நிலையம், தற்போது அது காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

துபையில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் ஹோட்டலில் சனிக்கிழமை தீப்பிடித்து எரிவதை பிபிசி உறுதிப்படுத்திய வீடியோ காட்டுகிறது. அடர்ந்த கரும்புகை வானத்தை நோக்கி எழுகிறது. பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் தீப்பற்றியதில் நான்கு பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரணம், சனிக்கிழமை அன்று (பிப்ரவரி 28) இஸ்ரேல் – அமெரிக்கா, இரான் மீது தொடங்கிய தாக்குதல். அதில் இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

By admin