• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

இரானில் கடற்படை முற்றுகை அமெரிக்காவை இன்னும் ஆபத்தில் தள்ளும் ஏன்?

Byadmin

Apr 13, 2026


இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் படகு (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் படகு (கோப்புப்படம்)

இரான் துறைமுகங்களை முற்றுகையிடுவது என்பது, அமெரிக்கா இதற்கு முன்பு இருந்ததை விட சட்ட ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் இன்னும் அபாயகரமான பகுதிக்குள் நுழைவதைக் குறிக்கிறது.

அமெரிக்காவில் இதை செய்ய முடியும், ஆனால் அதில் சில ஆபத்துகள் உள்ளன.

அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல்கள் பந்தர் அப்பாஸ் அல்லது ஜாஸ்க் போன்ற துறைமுகச் சுவர்களுக்கு வெளியே சுற்றித் திரியாது.

அப்படிச் செய்வது டிரோன், ஏவுகணை அல்லது “காமிகாஸி” அதிவேகப் படகுகள் மூலம் உடனடித் தாக்குதலைத் தூண்டுவதாக அமையும்.

அதற்குப் பதிலாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம், எந்தக் கப்பல்கள் இரானிய துறைமுகங்களில் இருந்து வெளியேறியுள்ளன மற்றும் அவை யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிய செயற்கைக்கோள் மற்றும் பிற உளவுத் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும்.

By admin