• Tue. Jun 24th, 2025

24×7 Live News

Apdin News

இரானில் குண்டு வீச்சுகளுக்கு நடுவே தமிழக மீனவர்கள் : “கரையேறவும் முடியாது , கடலுக்கும் போக முடியாது”

Byadmin

Jun 24, 2025


இரான் தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, இரானில் கிஸ் பகுதியில் வசிக்கும் தங்கச்சிமடத்தை சேர்ந்த எல்ரோ, அருகில் உள்ள பகுதியில் குண்டுகள் வீசப்படுவதால் அங்கிருக்க பயமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இஸ்ரேலுக்கு ஆதரவாக இரான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரான் இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள் சிலரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

பிபிசி தமிழ் தொடர்பு கொண்டவர்கள் தற்போது வரை பத்திரமாக இருப்பதாகவும், ஆனால் நாடு திரும்புவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போர் சூழல் காரணமாக செல்போன் இணையம் மற்றும் செல்போன் நெட்வொர்க் முறையாக அங்கே இயங்கவில்லை. எனவே மீனவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், அவர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதும் சவாலாக இருப்பதாக, தமிழகத்தில் உள்ள மீனவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்ட போது தெரிவிக்கப்பட்டது.

இரானில் உள்ள தமிழக மீனவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்து வரும் நிலையில் விரைவில் மீனவர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

By admin