இரானுக்கு எதிராக தாங்கள் ஒரு ‘முன்னெச்சரிக்கை தாக்குதலை’ நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இரானிய தலைநகரின் குடியரசுப் பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் வெடிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்கள் இப்போது இரானிய ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
தெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கில் பல புதிய வெடிப்புகள் கேட்டதாக இரானில் உள்ள, அரசுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, தெஹ்ரானின் ஜோம்ஹோரி சதுக்கம்
இஸ்ரேலில் அவசரநிலை
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (பிப்ரவரி 28) காலை வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் முழுவதும் ஒரு சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலையை” அறிவித்துள்ளார்.