• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

இரான் – இஸ்ரேல் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் மீண்டும் தாக்குதல் – என்ன நடக்கிறது?

Byadmin

Jun 15, 2025


இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் – இரான் ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகம், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதேநேரத்தில், இரான் ஒரே இரவில் அலையலையாக இரு முறை ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு புறமுமே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

டெஹ்ரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக இரானிய எண்ணெய் அமைச்சகமும் கூறுகிறது.

அதில் எரிபொருள் அதிகமாக இல்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

By admin