• Sat. Oct 5th, 2024

24×7 Live News

Apdin News

இரான் காமனெயி: இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு கூறியது என்ன?

Byadmin

Oct 5, 2024


காமனெயி

பட மூலாதாரம், EPA

இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில், இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இரானின் ‘எதிரிகள்’, இஸ்லாமிய உலகில் பிரிவினைக்கு வித்திடுவதாக குற்றம் சாட்டிய அவர் அதற்கு கண்டனம் தெரிவித்தார். கூடவே இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் அவர் நியாயப்படுத்தினார்.

அயத்துல்லா இந்த உரையை ஆற்றிய போது, மொசல்லா மசூதியில் அவரது பேச்சைக் கேட்பதற்காக பெரும் கூட்டம் கூடியிருந்தது.

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை நினைவு கூர்ந்து காமனெயி தனது உரையைத் தொடங்கினார்.

By admin