• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?

Byadmin

Mar 20, 2026


துபை, மத்திய கிழக்கு, இந்தியர்கள், கைது

பட மூலாதாரம், @UAE_PP/X

படக்குறிப்பு, கைதுகள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு.

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சமூக ஊடகங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதுகள் குறித்த அறிவிப்பு மார்ச் 14, 15-ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது.

ஆனால், இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கிய முதல் நாளிலேயே (பிப்ரவரி 28) சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான ஒரு கடுமையான எச்சரிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அப்போதிலிருந்து வளைகுடா நாடுகளை இரான் தாக்கி வருகிறது.

பிற வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடுகையில், இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்படுவதற்கு காரணம், அந்நாடு கச்சா எண்ணெய் துறையை மட்டுமே நம்பி இயங்கவில்லை.

By admin