• Fri. Mar 27th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகப்பெரிய அடியை வாங்கியது ஏன்?

Byadmin

Mar 27, 2026


இரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஒரு தொழில்பேட்டைப் பகுதியிலிருந்து புகை எழுகிறது (படம்: மார்ச் 1, 2026).

பட மூலாதாரம், Christopher Pike/Getty Images

படக்குறிப்பு, இரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஒரு தொழில்பேட்டைப் பகுதியிலிருந்து புகை எழுகிறது (படம்: மார்ச் 1, 2026).

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் நான்காவது வாரத்தில் நுழையும் வேளையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேகமாக இரான் நாட்டின் இலக்காக மாறி வருகிறது.

இரான் நாட்டின் ஆரம்பகால உத்தி இஸ்ரேலை மட்டும் தாக்குவதாக இருந்தது.

ஆனால் இப்போது அந்த உத்தியிலிருந்து விலகி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் மீது ஆயிரக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது இரான்.

போரின் தொடக்கத்திலேயே, இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைப்போம் என்று இரான் கூறியிருந்தது.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நல்லுறவு இருப்பதால், இரான் தனது தாக்குதல்களை அந்நாட்டின் மீது குவித்து, ஒரு தெளிவான செய்தியை பிற இரு நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.

By admin