• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

Byadmin

Mar 25, 2026


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக்   கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஃபண்டுக்மியா கிராமத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது கடும்போக்கு யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

சனிக்கிழமையன்று 18 வயதான யூதா ஷெர்மன் என்ற இளம் குடியேறி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை தொடங்கியது.

அவர் தனது குவாட் பைக்கில் சென்றபோது, பாலத்தீனியர் ஒருவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து திட்டமிடப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது குறித்து தாங்கள் விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் குழுக்கள் அவரது மரணத்திற்கு “பழிவாங்கும் நடவடிக்கைக்கு” அழைப்பு விடுத்தன.

By admin