• Mon. Jan 19th, 2026

24×7 Live News

Apdin News

இரான்: ரகசிய மறைவிடத்தில் தங்கியுள்ள காமனெயி அடுத்து என்ன செய்யலாம்?

Byadmin

Jan 19, 2026


இரானில் போராட்டம், ஆயதுல்லா அலி காமனெயி, அடுத்தது என்ன?, அமெரிக்கா, ரஷ்யா, சீனா

    • எழுதியவர், கஸ்ரா நஜி
    • பதவி, சிறப்பு செய்தியாளர், பிபிசி பாரசீக சேவை

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார்.

இரானில் போராடி வருபவர்களுக்கு உதவ அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, காசெம் சுலைமானி மற்றும் அபு பக்ர் அல்-பாக்தாதி என்று மட்டும் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் இரானின் மிக முக்கியமான ராணுவ உத்தி நிபுணரான சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐஎஸ் குழுவின் தலைவரான அல்-பாக்தாதி, 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வடக்கு சிரியாவில் அவர் மறைவிடத்தை அமெரிக்கப் படைகள் சூழ்ந்த போது தற்கொலை குண்டை செயல்படுத்தியதில் அவரும் அவரின் இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் டிரம்பின் உத்தரவின் பேரிலே நடத்தப்பட்டன.

By admin