• Sat. Oct 11th, 2025

24×7 Live News

Apdin News

இராபர்ட் டி நொபிலி: மதுரையில் கிறித்தவத்தை இவர் பரப்பியது எப்படி?

Byadmin

Oct 11, 2025


ரோமாபுரி பிராமணர், இராபர்ட் டி நொபிலி, மதுரை, மதம்,  கிறித்தவம்

பட மூலாதாரம், Penguin Random House India

படக்குறிப்பு, இராபர்ட் டி நொபிலி

ஐரோப்பாவில் சமயசீர்திருத்த எதிர்ப்பு இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து இயேசு சபையினர் இந்தியாவிற்கு வரத் தொடங்கியிருந்தனர். பன்னாட்டு வர்த்தகத்திற்கேற்ற மையமாக கோவா கருதப்பட்டதால், 1510ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆளுநர் அல்போன்சோ டி அல்புகர்க், பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தார்.

அந்நேரத்தில் அங்கு இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து சமயச் சடங்குகள் தடை செய்யப்பட்டன, ஆதரவற்றோர் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டனர். நொபிலிக்கு முன் வந்த புனித பிரான்சிஸ் சேவியர் (1542), போர்ச்சுக்கீசிய அரசு ராணுவ அதிகாரிகளின் அடாவடித்தனங்கள், கொள்ளை, ஊழல் பற்றி வேதனையோடு மறை மாநில அதிபருக்கு புகார் செய்ததோடு, ‘போர்ச்சுக்கீசியர்கள் பேராசையினாலும் ஒழுக்கக்கேட்டாலும் இங்குள்ள மக்களுக்கு நாம் செய்த பணிகள் எல்லாம் அழிவதைக் காணும்போது மனம் வேதனையாய் இருப்பதாகவும், எனவே இங்கிருந்து எனது நேரத்தை வீணடிக்காது ஜப்பான் செல்லப்போவதாகவும்’ போர்ச்சுகல் மன்னர் மூன்றாம் ஜானுக்கும் கடிதம் எழுதினார்.

இருப்பினும் பிரான்சிஸ் சேவியர் வருகையால் மீன்பிடிக் கடற்கரைப் பகுதிகளில் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை, பரதவர், கேரள முக்குவர்கள், காரவர்கள் உட்பட 50,000 ஆக உயர்ந்திருந்தது.

இராபர்ட் டி நொபிலியின் சமயப்பணி ஆர்வம்

இராபர்ட் டி நொபிலி ரோமில் ஒரு உயர் குடியில் பிறந்தவர் (1577). இரு போப்பாண்டவர்களுக்கு (மூன்றாம் ஜூலியஸ், இரண்டாம் மார்செலஸ்) உறவினர். ரோமின் ஒரு பகுதிக்கு கோமகனாக வேண்டியவர். ஆதலால் அவர் இயேசு சபையில் சேர்ந்து சமயப் பணியாற்றுவதை அவர் பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் நொபிலி தனது பதினேழாவது வயதிலேயே இயேசு சபையில் சேர்வதில் தீர்மானமாக இருந்தார்.



By admin