• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் வீட்டார்: புதுமணப் பெண் நெல்லை காவல் ஆணையரிடம் புகார் | Husbands family asked iruttukadai halwa shop as dowry in tirunelveli

Byadmin

Apr 17, 2025


நெல்லை: இருட்​டுக்​கடையை வரதட்​சணை​யாக கணவர் வீட்​டார் கேட்​கின்​றனர் என்று புது​மணப் பெண் போலீ​ஸில் புகார் தெரி​வித்​துள்​ளார். நெல்லை டவுனில் ‘இருட்​டுக்​கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்​திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்​ப​தி​யின் மகள் ஸ்ரீகனிஷ்​கா. இவர், வரதட்​சணை கேட்டு கணவர் வீட்​டார் கொலை மிரட்​டல் விடுப்​ப​தாக நெல்லை காவல் ஆணை​யரிடம் புகார் மனு அளித்​திருந்​தார்.

இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்கா​வுக்​கும், கோவையைச் சேர்ந்த பல்​ராம்​சிங் என்​பவருக்​கும் பிப்​.2-ம் தேதி திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மண​மாகி ஒரு மாதம்​கூட ஆகாத நிலை​யில், என் மகளை வரதட்​சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்​படுத்தி இருக்​கிறார். அவரது குடும்​பத்​தினரும் என் மகளிடம் கூடு​தல் வரதட்​சணை வேண்​டும் என்​றும், ரூ.1.5 கோடி மதிப்​புள்ள கார் வேண்​டுமென்​றும் கேட்டு துன்​புறுத்​தி​யுள்​ளனர். அவர்​கள் கேட்ட காருக்கு நாங்​களும் புக் செய்து வைத்​திருந்​தோம்.

இந்​நிலை​யில், எனது மகளின் கணவர் பல்​ராம்​சிங், வேறு ஒரு பெண்​ணுடன் தொடர்​பில் இருந்​துள்​ளார். “இதுகுறித்து வெளியே கூறி​னால் உன்னை கொலை செய்து விடு​வேன்” என்று பல்​ராம்​சிங், எனது மகளை மிரட்​டி​யுள்​ளார். கடந்த மார்ச் 15-ம் தேதி கடும் வேதனை​யில் இருந்த எனது மகள், கோவையி​லிருந்து நெல்​லைக்கு வந்​து​விட்​டார்.

மறு​நாளே எங்​கள் வீட்​டுக்கு வந்த பல்​ராம்​சிங் மற்​றும் அவரது குடும்​பத்​தினர், ‘உங்​கள் மகளு​டன் வாழ வேண்​டும் என்​றால் இருட்​டுக்கடை அல்வா உரிமத்தை பல்​ராம்​சிங் பெயரில் எழு​தித்தர வேண்​டும்’ என மிரட்​டினர். இந்​தப் பிரச்​சினை குறித்து தமிழக முதல்​வரின் தனிப் பிரிவுக்​கும் மனு அளித்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார். ஸ்ரீகனிஷ்கா கூறும்போது, “உனது அம்​மா​விட​மிருந்து இருட்​டுக்​கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழு​தித் தர வேண்​டும் என்று எனது கணவர் கேட்​டார்” என்​றார்.

கணவர் வீட்​டார் மறுப்பு: இது தொடர்​பாக கோவை​யில் பல்​ராமின் தந்தை யுவ​ராஜ்சிங் கூறும்​போது, “அதிக சொத்​துள்ள நாங்​கள் ஏன் வரதட்​சணை கேட்​கப் போகிறோம். இருட்​டுக்​கடையை நாங்​கள் கேட்​ப​தாக கூறு​வது ஆதா​ரமற்​றது. கார் கேட்டதாக கூறப்படுவதும் தவறான தகவல். எங்​கள் சொத்​துகளை அபகரிக்​கும் நோக்​கில் பொய்யான புகார்களைக் கூறுகின்​றனர். அவர்​களது புகாரை சட்​டப்​படி எதிர்​கொள்​வோம்” என்​றார்​.



By admin