• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை | ED raid homes of cough medicine company owner and government officials

Byadmin

Oct 14, 2025


சென்னை: இரு​மல் மருந்​தால் 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரத்​தில், மருந்து ஏற்​றுமதி செய்​த​தில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக எழுந்த புகாரையடுத்​து, மருந்து நிறுவன உரிமை​யாளர், அரசு அதி​காரி​களின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இதில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய பிரதேசம் மாநிலம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து சாப்​பிட்டு 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். விசா​ரணை​யில், இரு​மல் மருந்​தில் டைஎ​திலீன் கிளை​கோல் நச்சு அதி​கள​வில் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்​து, ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறு​வனத்​தின் உரிமம் ரத்து செய்​யப்​பட்டு ஆலை மூடப்​பட்​டது. பின்​னர், மத்​திய பிரதேசம் போலீ​ஸார் நிறுவன உரிமை​யாளர் ரங்​க​நாதனை கைது செய்​தனர். மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக, காஞ்​சிபுரம் முது​நிலை மருந்​துகள் ஆய்​வாளர்​கள் கார்த்​தி​கேயன், தீபா ஜோசப் ஆகிய இரு​வரை சஸ்​பெண்ட் செய்து தமிழக அரசு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், முறை​யான அனு​மதி இல்​லாமல் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறு​வனம் மருந்தை ஏற்​றுமதி செய்ய தடையற்ற சான்று வழங்க சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு லட்​சக்​கணக்​கில் பணம் கொடுக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் புகார் எழுந்​தது. இதையடுத்து சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் நிறு​வனம் மற்​றும் அதன் உரிமை​யாளர் ரங்​க​நாதன் உள்​ளிட்​டோர் மீது அமலாக்​கத் துறை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. அந்​தவகை​யில் நேற்று சென்​னை, காஞ்​சிபுரத்​தில் அந்​நிறு​வனம் தொடர்​புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

இதன்​படி சென்னை கோடம்​பாக்​கத்​தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் மருந்து நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதனின் வீட்​டுக்கு நேற்று காலை 2 வாக​னங்​களில் வந்த 5-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இதே​போல், மருந்து நிறு​வனத்​துக்கு தடை​யில்லா சான்று வழங்​கிய​தாக சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் திரு​வான்​மியூர் பால​கிருஷ்ணா சாலை​யில் உள்ள தீபா ஜோசப், அண்​ணாநகரில் உள்ள கார்த்​திகேயன் வீட்​டிலும் சோதனை நடத்​தப்​பட்​டது. மேலும், காஞ்​சிபுரம் மாவட்​டம் சுங்​கு​வார்​சத்​திரம் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் மருந்து உற்​பத்தி ஆலை​யிலும் அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். அதே​போல், குரோம்​பேட்டை பார்​வதிநகரில் உள்ள ஓய்​வு​பெற்ற ஆசிரியர் சீனி​வாசன் என்​பவரது வீட்​டிலும் சோதனை நடை​பெற்​றது.

இந்த சோதனை​யில் பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் சிக்​கி​யிருப்​ப​தாக கூறப்​படு​கிறது. எனினும் சோதனை முழு​மை​யாக நிறைவடைந்த பிறகே, ஆவணங்​களின் விவரங்​கள் குறித்​தும், மருந்து ஏற்​றும​தி​யில் எத்​தனை கோடி ரூபாய் முறைகேட்​டில் அந்​நிறு​வனம் ஈடு​பட்​டது என்​பது குறித்​தும் தெரிய​வரும். இதனிடையே மத்​தி​யப் பிரதேச போலீ​ஸார் ரங்​க​ராஜனை மருந்து ஆலைக்கு நேற்று அழைத்து வந்​தனர். அமலாக்​கத்துறை சோதனை நடந்து வந்​த​தால் தனி​யார் கட்​டிடத்​தில் வைத்து ரங்​க​ராஜனிடம் வி​சா​ரணை நடத்​தப்​பட்​டது. தமிழக அரசின் மருந்து கட்​டுப்​பாட்​டுத்துறை அதி​காரி​களும்​ வி​சா​ரணை​யில்​ ஈடுபட்​டுள்​ளனர்​.



By admin