• Thu. Dec 18th, 2025

24×7 Live News

Apdin News

இருளில் புலிகளிடம் இருந்து குழந்தைகளைக் காக்க தடியுடன் களமிறங்கிய 4 பெண்கள்

Byadmin

Dec 18, 2025


கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடு சூழ்ந்துள்ளது. இங்குள்ள ஒவ்வொருவரும் புலி மீதான பயத்திலேயே வாழ்கிறார்கள். புலி எப்போது, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது.

பட மூலாதாரம், BHAGYASHRI RAUT

படக்குறிப்பு, புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தங்கள் கிராமத்து குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்ய நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.

    • எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
    • பதவி, பிபிசி மராத்திக்காக

கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடு சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் புலிகளின் மீதான பயத்திலேயே வாழ்கிறார்கள்.

புலி எப்போது, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது.

காட்டிலுள்ள விலங்குகளிடம் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள கிராமத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

காட்டில் விலங்குகள் சுதந்திரமாகத் திரிய, மனிதர்களோ கூண்டுக்குள் (வேலிக்குள்) அடைந்து கிடக்கும் விசித்திரமான காட்சிதான் இந்தக் கிராமத்தில் நிலவுகிறது.

இதுதான் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டம் மோஹர்லி வனப்பகுதியில் உள்ள சீதாராம்பேட் கிராமத்தின் சூழல்.

By admin