• Tue. Nov 25th, 2025

24×7 Live News

Apdin News

இரு ஆண்டுகளில் 18 பேரை மணமுடித்த பெண் கைது: ‘திருமணம் செய்தவுடன் சண்டையிட்டுப் பிரிந்து, வேறு நபரை மணமுடித்து கொள்வேன்’

Byadmin

Nov 25, 2025


பஹுச்சராஜி அருகே உள்ள அடிவாடா கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான எம்.எஸ்சி பட்டதாரி சச்சின் படேல் தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியதை அடுத்து, சாந்தினி, சவிதா ரத்தோட், சாந்தினியின் மாமா என்று கூறப்பட்ட ராஜு தக்கர் மற்றும் அத்தை ரஷ்மிகா பஞ்சால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பட மூலாதாரம், Bhargav Parikh

படக்குறிப்பு, சாந்தினி தனது கும்பலுடன் சேர்ந்து பல இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

சமீபத்தில் குஜராத்தின் மெஹ்சானா காவல்துறையினர் ‘போலி மணப்பெண்’ கும்பலைக் கைது செய்துள்ளனர்.

திருமணம் செய்ய விரும்பும் ஆண்களை இந்தக் கும்பல் குறிவைத்து, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் அந்த நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மணப்பெண்ணை அங்கிருந்து தப்ப வைத்துவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

நவம்பர் 20, 2025 அன்று வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ‘போலி மணமகள்’ என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணையும், இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைது செய்தனர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த இளம்பெண் 24 வயதில் 18 முறை திருமணம் செய்துகொண்டு, அந்த மணமகன்களை ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த மோசடி எப்படி வெளிச்சத்திற்கு வந்தது, போலீசார் எப்படி இவர்களைக் கைது செய்தனர் என்பன போன்ற விவரங்களை அறிய பிபிசி முயன்றது.

By admin