• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

இரு மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமலான வரலாறு – அண்ணா சட்டமன்றத்தில் பேசியது என்ன?

Byadmin

Feb 20, 2025


இந்தி எதிர்ப்புப் போராட்டம், மும்மொழிக் கொள்கை, இருமொழி கொள்கை

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், இருமொழிக் கொள்கை உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது

2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு முழுமையாக ஏற்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கையைக் காரணம் காட்டி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த இரு மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது எப்படி?

தாய்மொழி, ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க வேண்டுமென 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை (4.13) குறிப்பிடுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இதனை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை 1968ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் அமலில் இருந்து வருகிறது. இந்தக் கொள்கை எப்படி அமலுக்கு வந்தது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

1964- 65 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை இந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாகத் தொடரும் என்ற அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளைக் கடுமையாக பாதித்திருந்தது.

By admin