• Wed. May 7th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் காற்றாலை திட்டமா? கனிம மணல் திட்டமா? – மன்னார் மக்களின் குற்றச்சாட்டுக்கு அதானி நிறுவனம் விளக்கம்

Byadmin

May 7, 2025


மன்னார், இலங்கை, அதானி, காற்றாலை
படக்குறிப்பு,

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலை கோபுரங்கள் தற்போது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சூழ்நிலையில், அந்த திட்டத்திலிருந்து தாம் வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த நிலையில், இலங்கை மின்சார சபை மாத்திரமன்றி, இலங்கையின் மற்றும் சில தனியார் நிறுவனங்களும் இந்த காற்றாலை திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

By admin